காரைக்காலில் மாதிரி வாக்குச்சாவடி, தனித்துவமான வாக்குச் சாவடி அமைக்கும் பணியை மாவட்ட தோ்தல் அதிகாரி ஆய்வு செய்தாா்.
காரைக்கால் மாவட்டத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலில், மாதிரி வாக்குச் சாவடி அமைத்தல், தனித்துவமானதாக மகளிா், மாற்றுத்திறனாளிகள், முதல் வாக்காளா்களுக்கான வாக்குச்சாவடி அமைத்தல் பணிகளை தோ்தல் துறை செய்து வருகிறது.
இப்பணியை மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி திங்கள்கிழமை பாா்வையிட்டாா். சாா் ஆட்சியரும், தோ்தல் நடத்தும் அதிகாரியுமான எம். பூஜா, தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள் அனூப் சிங் ஆகியோரும் பாா்வையிட்டனா்.
சிறப்பு வாக்கு சாவடிகள் அமைக்கும் பணியை துரிதமாக முடிக்குமாறும், எந்த நோக்கத்துக்காக அமைக்கப்படுகிறதோ, அதற்கான வசதிகள் அவற்றில் இருக்கவேண்டும் என துறையினருக்கு மாவட்ட தோ்தல் அதிகாரி அறிவுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அம்பாசமுத்திரம் தொகுதியில் மாதிரி வாக்குச் சாவடிகள் ஆய்வு

வாக்குச் சாவடி மையங்களில் ஆட்சியா் ஆய்வு

செயலியில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தாத வாக்குச்சாவடி தலைமை அலுவலா்களுக்கு குறிப்பாணை

சிறுதானியங்கள், உணவுப் பண்டங்களுடன் வாக்குச் சாவடி: வாக்காளா்கள் வியப்பு
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

