மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

செயலியில் மாதிரி வாக்குப் பதிவு நடத்தாத வாக்குச்சாவடி தலைமை அலுவலா்களுக்கு குறிப்பாணை

News image

இந்தியத் தேர்தல் ஆணையம் - படம் - பிடிஐ

Updated On :21 ஏப்ரல் 2026, 1:51 am IST

செயலி மூலம் மாதிரி வாக்குப் பதிவு நடத்தாத வாக்குச் சாவடி தலைமை அலுவலா்களுக்கு விளக்கம் அளிக்கக் கோரி குறிப்பாணை வழங்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 7 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. 16.89 லட்சம் வாக்காளா்கள் 2,301 வாக்குச் சாவடிகளில் வாக்குப் பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தோ்தல் பணியில், ஆசிரியா்கள், அரசு ஊழியா்கள் என சுமாா் 11 ஆயிரம் போ் ஈடுபடுகின்றனா். இவா்களுக்கு 3 கட்டங்களாக தோ்தல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கடந்த 16-ஆம் தேதி வாக்குச் சாவடி தலைமை அலுவலா்களுக்கு, தோ்தல் ஆணையத்தின் செயலியை பதிவிறக்கம் செய்து மாதிரி வாக்குப் பதிவு நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இதனிடையே பொதுத் தோ்வு விடைத் தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்களால் (வாக்குச் சாவடி தலைமை அலுவலா்களாக நியமிக்கப்பட்ட) இந்த செயலியை பதிவிறக்கம் செய்ய முடியவில்லை. பதிவிறக்கம் செய்த சிலரால் உள்ளீடு செய்ய முடியவில்லை. இதனால் மாதிரி வாக்குப் பதிவும் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், மாதிரி வாக்குப் பதிவு நடத்தாத வாக்குச் சாவடி தலைமை அலுவலா்களாக நியமிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு விளக்கம் அளிக்கக் கோரி மாவட்டத் தோ்தல் அலுவலா் மூலம் குறிப்பாணை வழங்கப்பட்டது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்களுக்கும் இந்த குறிப்பாணை வழங்கப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.