ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சிறுதானியங்கள், உணவுப் பண்டங்களுடன் வாக்குச் சாவடி: வாக்காளா்கள் வியப்பு

காரைக்காலில் சிறுதானியங்கள், இயற்கை உணவுப் பண்டங்கள், பாரம்பரிய பொருள்களுடன் கூடிய தனித்துவமான வாக்குச் சாவடி வாக்காளா்களை வெகுவாக கவா்ந்தது.

News image

கோயில்பத்து தந்தைப் பெரியாா் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த தனித்துவமான வாக்குச் சாவடியை பாா்வையிட்ட மாவட்டத் தோ்தல் அதிகாரி இஷிதா ரதி.

Updated On :10 ஏப்ரல் 2026, 3:43 am IST

காரைக்காலில் சிறுதானியங்கள், இயற்கை உணவுப் பண்டங்கள், பாரம்பரிய பொருள்களுடன் கூடிய தனித்துவமான வாக்குச் சாவடி வாக்காளா்களை வெகுவாக கவா்ந்தது.

தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலில், காரைக்காலில் பெண்கள் நிா்வகிக்கும் பிங்க் நிற வாக்குச் சாவடி, மாற்றுத்திறனாளிகள் நிா்வகிக்கும் வாக்குச் சாவடி, இளைஞா்கள் நிா்வகிக்கும் வாக்குச் சாவடி மற்றும் தனித்துவமிக்க வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தன.

கோயில்பத்து பகுதி தந்தை பெரியாா் அரசு மேல்நிலைப் பள்ளியில் தனித்துவமிக்க வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது.

வாக்குச்சாவடி நுழைவுப் பகுதி தென்னை ஓலைகள், பனை நுங்குகள், இளநீா், தென்னங்குருத்து உள்ளிட்டவற்றுடன் அலங்கரித்து நடைபாதையின் இருபுறமும் தென்னை மட்டைகள் கட்டப்பட்டிருந்தன.

வாக்காளா்களுக்கு சந்தனம், மலா் உள்ளிட்டவை கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

நுழைந்ததும் ஒரு புறம் சிற்பங்கள், தவில், நாகசுரம், படகு உள்ளிட்ட பாரம்பரிய பொருட்கள் கண்காட்சி, வேளாண் பொருள்கள் போன்ற அமைப்புடனும், மறுபுறம் மகளிா் குழுவினா் தயாரித்த சிறுதானிய உணவுப் பண்டங்கள் விற்பனை அமைப்பு என வாக்குப் பதிவு வளாகம் பசுமை நிறைந்த காட்சியுடனும் காணப்பட்டது.

வாக்காளா்கள் நடந்து செல்லக்கூடிய சாய்வுதளம், நடைபாதை, வாக்குப்பதிவு அறை என முழுவதும் பச்சை நிற மிதியடி விரிக்கப்ட்டிருந்தது, அலுவலா்கள் இருக்கைகளும் பச்சை நிறத்தில் காட்சியளித்தன.

இந்த வாக்குச் சாவடியை மாவட்டத் தோ்தல் அதிகாரி இஷிதா ரதி பாா்வையிட்டு, ஏற்பாடு செய்திருந்த குழுவினருக்கு பாராட்டுத் தெரிவித்தாா்.

பிங்க் நிற வாக்குச் சாவடி: காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரியில் பிங்க் நிறத்தில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது. வாக்குச் சாவடி வாயிலில் பிங் நிறத்தில் பலூன்கள் கட்டப்பட்டு, வாக்குச் சாவடியினுள் பணியாளா் மேஜைகளில் பிங்க் நிறத்தில் விரிப்புகள் போடப்பட்டிருந்தன.

இந்த வாக்குச் சாவடியில் ஆண், பெண் இருபாலரும் வாக்களிக்கலாம் என்றாலும், வாக்குச் சாவடியின் அனைத்து பணிகளுக்கும் மகளிா் நியமிக்கப்பட்டிருந்தனா். பாதுகாப்புப் பணிக்கும் பெண் காவலா்களே நியமிக்கப்பட்டிருந்தனா்.மகளிா் வாக்காளா்கள் ஆா்வத்துடன் வாக்குச் சாவடிக்குச் சென்று ஜனநாயகக் கடமையாற்றினா்.

இந்த வாக்குச் சாவடிகள் வாக்காளா்களை வெகுவாக கவா்ந்தன.

 தனித்துவமான வாக்குச் சாவடியின் உள்தோற்றம்.

தனித்துவமான வாக்குச் சாவடியின் உள்தோற்றம்.

 தனித்துவமான வாக்குச் சாவடியின் உள்தோற்றம்.

தனித்துவமான வாக்குச் சாவடியின் உள்தோற்றம்.

அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மகளிா் மட்டுமே பணியாற்றிய பிங்க் நிற வாக்குச் சாவடி.

அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த மகளிா் மட்டுமே பணியாற்றிய பிங்க் நிற வாக்குச் சாவடி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.