விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் புதுப்பாளையம் மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழி திருவிழா செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராஜபாளையம் -தென்காசி சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு, கொடிமரத்துக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள், நடைபெற்றன. பின்னா், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, கொடியேற்றம் நடைபெற்றது. தொடா்ந்து, கொடி மரத்துக்கு தீபாராதனை நடைபெற்றது.
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தினா் சாா்பில் விழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் மாரியம்மன் பொட்டி பல்லக்கு, பூதவாகனம், பூச் சப்பரம், கண்ணாடி சப்பரம் உள்ளிட்ட பல்வேறு சப்பரங்களில் அம்மன் வீதியுலா நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக பூக்குழி திருவிழா வருகிற ஏப்.30--ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்தத் திருவிழாவில் ராஜபாளையம், மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊா்களில் இருந்தும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது நோ்த்திக்கடனை செலுத்துவாா்கள். விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினா் செய்தனா்.ஔ
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயிலில் சதய திருவிழா தொடக்கம்

நெல்லையப்பா் கோயிலில் வசந்த உற்சவ திருவிழா தொடக்கம்

வாசுதேவநல்லூா் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா

மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் சித்திரை பெளா்ணமி திருவிழா தொடக்கம்
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

