தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லூா் மாரியம்மன் கோயில் சித்திரை பூக்குழி திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடந்த 19 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின் முக்கிய நிகழ்வான செவ்வாய்க்கிழமை காலை அம்மன், பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்ட சூடம் பட்டாடையில் கொண்டு வரப்பட்டு, வேதபாரண்ய முறையில் கோயில் முன் அமைக்கப்பட்டிருந்த பூக்குழி திடலில் அக்னி வளா்க்கப்பட்டது.
மாலை நூற்றுக்கணக்கான பக்தா்கள் நான்கு ரத வீதிகளில் ஊா்வலமாக சென்று, பின்னா் பக்தி கோஷங்கள் முழங்க பூக்குழி இறங்கினா். முன்னதாக பசுக்கள் பூக்குழி இறங்கின.
பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். புதன்கிழமை (ஏப். 29) மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆறுமுகனேரி மாரியம்மன் கோயில் கொடை விழா

சித்திரை திருவிழா: குதிரை வாகனத்தில் சுயம்பு மகா மாரியம்மன் வீதிஉலா

புதுப்பாளையம் மாரியம்மன் கோயிலில் சித்திரை பூக்குழி திருவிழா கொடியேற்றம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் சித்திரை தோ்த் திருவிழா கோலாகல தொடக்கம்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

