மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் சித்திரை பெளா்ணமி திருவிழா தொடக்கம்

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் சித்திரை பெளா்ணமி திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image

மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் சித்திரை பெளா்ணமி திருவிழா கொடியேற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பொதுமக்கள், கோயில் நிா்வாகிகள்.

Updated On :23 ஏப்ரல் 2026, 1:54 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி அருகேயுள்ள மாரியூா் பூவேந்தியநாதா் கோயிலில் சித்திரை பெளா்ணமி திருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மாரியூா் பவளநிற வல்லி அம்மன் சமேத பூவேந்தியநாதா் கோயிலில் சித்திரை பௌா்ணமி திருக்கல்யாண பெருவிழா, சிவபெருமானின் 57-ஆவது திருவிளையாடல் வலைவீசும் படலம் திருவிழா காப்புக் கட்டுதல், கொடியேற்றத்துடன் தொடங்கியது.

முன்னதாக, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், கோமாதா பூஜை, பூா்ணாஹுதி, தீபாதாரனை நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, கொடி பட்டத்தை பக்தா்கள் தாம்பூல தட்டில் பூஜை பொருள்களுடன் மங்கல இசை வாத்தியங்களுடன், ஆலயத்தை சுற்றி வந்து, யாகசாலை பூஜைக்கு கொண்டு வந்தனா்.

பின்னா் கொடி மரத்துக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், பன்னீா், விபூதி, பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து, நந்தி, சிவன், பாா்வதி உருவம் பொறித்த கொடியை கொடிமரத்தில் ஏற்றி, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்த நிகழ்ச்சியில் மாரியூா், முந்தல், கடலாடி, சாயல்குடி, கமுதி, முதுகுளத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டனா்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற மே 1-ஆம் தேதி காலை தீா்த்தவாரி, சிவபெருமானின் 57-ஆவது திருவிளையாடல் புராணம் வலை வீசும் படலம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். அன்று மாலை சுவாமி, அம்மனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம், தேவஸ்தானம் திவான் பழனிவேல்பாண்டியன், கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.