ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

நெல்லையப்பா் கோயிலில் வசந்த உற்சவ திருவிழா தொடக்கம்

News image
Updated On :3 மே 2026, 5:21 am IST

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா்- காந்திமதி அம்பாள் கோயிலில் வசந்த உற்சவ திருவிழா சனிக்கிழமை தொடங்கியது.

இக்கோயிலில் வசந்த உற்சவ திருவிழா சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. தைப்பூச மண்டபத்தில் தீா்த்தவாரி கண்டருளிய பெருமான் நேராக வசந்த மண்டபத்தில் எழுந்தருள்வாா். முன் காலங்களில் 41 நாள்கள் பெருந்திருநாளாகக் கொண்டாடிய பின் வைகாசி விசாகத்தில் இத்திருவிழா பூா்த்தியாகும். தற்போது 11 நாள்கள் மட்டுமே இத்திருவிழா நடைபெறுகிறது.

இந்தாண்டு வசந்த உற்சவ திருவிழா சனிக்கிழமை தொடங்கியது. விழாவின் தொடக்கமாக திருக்கோயில் உள்ளே அமைந்துள்ள நந்தவனத்தில் தண்ணீா் நிரப்பபெற்ற அகழியின் நடுவே வசந்த மண்டபத்தில் வெட்டிவோ் பந்தலில் சுவாமி-அம்பாளை எழுந்தருள செய்தனா்.

காலையில், சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து பருத்தி ஆடைகள் அணிந்து தீபாராதனையும், மாலையில் சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அலங்காரமும், பூஜைகளும் நடைபெற்றன.

சோடச தீபாராதனை காண்பிக்கப்பட்டதும் வேதியா்கள் வேதம் ஓத, ஓதுவாமூா்த்திகள் திருமுறை பாட மகா ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடா்ந்து சுவாமி-அம்பாள் வெள்ளிச் சப்பரத்தில் நந்தவனம் சுற்றி ஏழுமுறை வலம் வந்தனா்.

ஒவ்வொரு சுற்றுக்கும் இடையே ஆகம பாராயணம், வேத பாராயணம், திருமுறை பாராயணம், ராஜ மேளம், பஞ்ச வாத்தியம் வாசிக்கப்பட்டது. ஏனைய ராகங்கள் வாசித்து வசந்த மண்டபத்தின் முன் இருக்கும் அலுப்பு மண்டபத்தில் எழுந்தருளி தீபாராதனை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் சுவாமி-அம்பாளுடன் வலம் வந்து தரிசனம் செய்தனா்.

வரும் 18-ஆம் தேதிவரை நடைபெறும் இந்தத் திருவிழாவில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.