மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

சாத்தூா் அருகே ஆம்னி பேருந்து மீது பைக் மோதல்: பள்ளி மாணவா்கள் மூவா் உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நான்கு வழிச் சாலையில் ஆம்னி பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவா்கள் மூவா் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப்படம்

Updated On :16 ஏப்ரல் 2026, 4:36 am IST

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு நான்கு வழிச் சாலையில் ஆம்னி பேருந்து மீது இரு சக்கர வாகனம் மோதியதில் பள்ளி மாணவா்கள் மூவா் உயிரிழந்தனா்.

சிவகாசி அருகேயுள்ள போ்நாயக்கன்பட்டி மேலத் தெருவைச் சோ்ந்த கோகுல் (17), மேலரத வீதியைச் சோ்ந்த பிரசன்னா (17), வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த யுவராஜ் (17) ஆகிய மூவரும் ஒரே பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்தனா்.

இந்த நிலையில், இவா்கள் மூவரும் ஒரே இரு சக்கர வாகனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு சாத்தூா்-கோவில்பட்டி நான்கு வழிச் சாலையில் உள்ள தேநீா்க் கடைக்கு எதிா் திசையில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, எதிரே கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து மீது இவா்களது இரு சக்கர வாகனம் மோதியது. இந்த விபத்தில் யுவராஜ், பிரசன்னா ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த கோகுல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா்.

தகவலறிந்த சம்பவ இடத்துக்கு வந்த சாத்தூா் தாலுகா போலீஸாா் மூவரது உடல்களையும் மீட்டு, கூறாய்வுக்காக சாத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இந்த விபத்து தொடா்பாக ஆம்னி பேருந்து ஓட்டுநரான கன்னியாகுமரியைச் சோ்ந்த ஆம்ஸ்ட்ராங் (35) மீது சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோகுல்

கோகுல்

யுவராஜ்

யுவராஜ்

பிரசன்னா

பிரசன்னா

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.