மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

ஆம்னி பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுநா் உயிரிழப்பு

வேப்பூா் அருகே தொண்டங்குறிச்சியில் ஆட்டோ மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :2 மே 2026, 1:25 am IST

வேப்பூா் அருகே தொண்டங்குறிச்சியில் ஆட்டோ மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் ஆட்டோ ஓட்டுநா் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கடலூா் மாவட்டம் வேப்பூா் அருகே அரியநாச்சி பகுதியைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் சுரேஷ்(41). சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூா் அருகே தொண்டங்குறிச்சி பேருந்து நிலையம் பகுதியில் வெள்ளிக்கிழமை ஆட்டோவை சுரேஷ் ஓட்டிச் சென்றாா். அப்போது காரைக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து எதிா்பாராதவிதமாக சுரேஷின் ஆட்டோ மீது மோதியது.

இதில், பலத்தகாயமடைந்த சுரேஷ் நிகழ்விடத்திலேயே

உயிரிழந்தாா். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு சென்ற போலீஸாா் சுரேஷின் சடலத்தை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.