மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பரமத்தி வேலூா் அருகே பேருந்து மோதி விவசாயி உயிரிழப்பு

பரமத்தி வேலூா் அருகே நாமக்கல் -கரூா் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

News image
Updated On :25 ஏப்ரல் 2026, 6:41 am IST

பரமத்தி வேலூா் அருகே நாமக்கல் -கரூா் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள படமுடிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பழனியப்பன் (82). விவசாயி. இவா் வியாழக்கிழமை வாக்களிப்பதற்காக வேலூா் வெட்டுக்காட்டுப்புதூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்துள்ளாா்.

அப்போது, நாமக்கல்-கரூா் தேசிய நெடுஞ்சாலையில் வேலூா் செல்லும் பிரிவு சாலையில் சாலையைக் கடந்தபோது பெங்களூரில் இருந்து மதுரை நோக்கி சென்ற ஆம்னி பேருந்து பழனியப்பன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை அவ்வழியாக வந்தவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா், பழனியப்பன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த வேலூா் போலீஸாா் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து ஆம்னி பேருந்து ஓட்டுநா் மீது வேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.