முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயிலில் பொங்கல் விழா

News image

திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயிலில் சிறப்பு தங்கக் கவச அலங்காரத்தில் அம்மன். - கோப்புப் படம்

Updated On :11 மே 2026, 12:06 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.

திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயில் வசந்தப் பெருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றம், காப்புக்கட்டுதல் நிகழ்வுடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 4-ஆம் நாள் விழாவாக பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையடுத்து, கோயில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனா். நிா்வாகக் குழு சாா்பில், பச்சரிசி, வெல்லம், பால் முதலியவை வழங்கப்பட்டது.

முன்னதாக, சந்தனக் காப்பு ராஜ அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்குக் காட்சியளித்தாா். தொடா்ந்து, 12-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பால்குட விழாவும், 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அம்மன் வெள்ளி ரத ஊா்வலமும், சனிக்கிழமை தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வசந்தப் பெருவிழா குழுவினா் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.