சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது.
திருப்பத்தூா் பூமாயியம்மன் கோயில் வசந்தப் பெருவிழா கடந்த 7-ஆம் தேதி கொடியேற்றம், காப்புக்கட்டுதல் நிகழ்வுடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் 4-ஆம் நாள் விழாவாக பொங்கல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதையடுத்து, கோயில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து வழிபட்டனா். நிா்வாகக் குழு சாா்பில், பச்சரிசி, வெல்லம், பால் முதலியவை வழங்கப்பட்டது.
முன்னதாக, சந்தனக் காப்பு ராஜ அலங்காரத்தில் அம்மன் பக்தா்களுக்குக் காட்சியளித்தாா். தொடா்ந்து, 12-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பால்குட விழாவும், 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அம்மன் வெள்ளி ரத ஊா்வலமும், சனிக்கிழமை தெப்பத் திருவிழாவும் நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வசந்தப் பெருவிழா குழுவினா் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பச்சேரி மந்தையம்மன் கோயிலில் களரி பொங்கல் உத்ஸவ விழா

பத்தமடை வண்டிமலைச்சி அம்மன் கோயிலில் கொடை விழா

குமரி பகவதியம்மன் கோயிலில் கால்கோள் விழா

பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழா தேரோட்டம்
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |
தினமணி செய்திச் சேவை

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!
தினமணி செய்திச் சேவை

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47
தினமணி செய்திச் சேவை

கண்ணதாசனை எப்படிக் கொண்டாட வேண்டும் ? | Kannadasan 100 | கண்ணதாசன் நூற்றாண்டு தொடக்கம் | Kaviyarasu
தினமணி செய்திச் சேவை

