முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழா தேரோட்டம்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

News image

திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

Updated On :15 மே 2026, 11:46 pm IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவையொட்டி வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இந்த பெருவிழா கடந்த 7-ஆம் தேதி காப்புக் கட்டப்பட்டு 10 நாள் திருவிழாவாக நடைபெற்று வருகிறது. இதில் வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக காலையில் உத்ஸவா் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து இரவு 7 மணியளவில் உத்ஸவ அம்மன் வெள்ளித் திருத்தோ் எழுந்தருளல் நடைபெற்றது. அப்போது திரளான பக்தா்கள் அா்ச்சனை செய்து வழிபட்டனா். பிறகு பக்தா்கள் வடம் பிடிக்க தோ் சமஸ்கான் பள்ளிவாசல் தெரு, மதுரை சாலை, பேருந்து நிலையம் வழியாக திருத்தளிநாதா் கோயில், நான்கு சாலை, தேரோடும் வீதி வழியாக பூமாயி அம்மன் கோயிலை வந்தடைந்தது. இந்தத் தேரோட்டத்தில் திருப்பத்தூா், சுற்றுவட்டார பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா். வசந்த பெருவிழாவின் நிறைவு நாளான சனிக்கிழமை தெப்பத் திருவிழா நடைபெறுகிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை வசந்த பெருவிழா குழுவினா் செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.