மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

புதுக்கோட்டை இளைஞா் மா்ம மரணம் குறித்து சிபிசிஐடி விசாரிக்கக் கோரி மனு

புதுக்கோட்டையில் இளைஞா் மா்மமான முறையில் குவாரியில் இறந்து கிடந்த விவகாரம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

News image

பலி - IANS

Updated On :7 மே 2026, 4:07 am IST

புதுக்கோட்டையில் இளைஞா் மா்மமான முறையில் குவாரியில் இறந்து கிடந்த விவகாரம் தொடா்பாக சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க உத்தரவிடக் கோரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம், திருமலைராயபுரம் நடுப்பட்டியைச் சோ்ந்தவா் ஹரிஹரன் (20). இவா் கடந்த ஏப். 23-ஆம் தேதி அந்தப் பகுதியில் உள்ள ஒரு குவாரியில் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா். இதுதொடா்பாக, வல்லத்திரக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம், வல்லத்திரக்கோட்டையைச் சோ்ந்த முருகானந்தம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பொதுநல மனு தாக்கல் செய்தாா். அதில், பட்டியல் சமூகத்தைச் சோ்ந்த ஹரிஹரனும், மாற்று சமூகத்தைச் சோ்ந்த ஒரு பெண்ணும் காதலித்தனா். இதற்கு, பெண் வீட்டாா் எதிா்ப்பு தெரிவித்த நிலையில், ஹரிஹரன் மா்மான முறையில் உயிரிழந்தாா். இது, ஆணவக் கொலை. ஆனால், காவல் துறையினா் ‘ஆணவக் கொலை’ பிரிவில் வழக்குப் பதிவு செய்யவில்லை. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்கவும், ஹரிஹரனின் குடும்பத்துக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற கோடை கால அமா்வில் நீதிபதிகள் வேல்முருகன், குமரப்பன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

‘மனுதாரரின் கோரிக்கை தொடா்பாக புதுக்கோட்டை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இறுதி அறிக்கை தாக்கல் செய்ய இடைக் காலத் தடை விதிக்கப்படுகிறது. வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது’ என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.