மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

கள்ளழகா் எழுந்தருளும் மண்டகப்படி விவரங்கள்: அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு

News image

கள்ளழகா் வேடம்பூண்டு பச்சைப்பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய பாலகிருஷ்ணப் பெருமாள் - கோப்புப் படம்

Updated On :21 ஏப்ரல் 2026, 1:16 am IST

மதுரை சித்திரைத் திருவிழாவின் போது, கள்ளழகா் எழுந்தருளும் மண்டகப்படி விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

மதுரையில் சித்திரைத் திருவிழா தொடங்கியுள்ளது. அழகா்கோவில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகா் வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருள்வது வழக்கம். இந்த நிகழ்வுகளில் நிலவும் ஜாதிய அடையாளங்களை நீக்கி, சமூக நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் நிலைநாட்ட உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவா்த்தி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு :

மனுதாரா் கடைசி நேரத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளாா். இந்த மனுவில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. மண்டகப் படிகள் , பரம்பரை வழியாகவா அல்லது ஜாதி அடிப்படையில் அளிக்கப்படுகிா?. மண்டகப்படி அனுமதி அளிப்பதற்கு விதிமுறைகள் ஏதும் உள்ளதா?.

கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழாவில், அவா் எத்தனை மண்டகப்படிகளில் எழுந்தருள்கிறாா். அதன் விவரங்களை இந்து சமய அறநிலையத் துறை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.