தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

திருமயத்தில் மறுவாக்கு எண்ணிக்கை கோரி தவெக வேட்பாளா் மனு

திருமயம் சட்டப் பேரவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனக்கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளா் சி. சிந்தாமணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :7 மே 2026, 5:17 am IST

திருமயம் சட்டப் பேரவைத் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனக்கோரி தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளா் சி. சிந்தாமணி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 4-ஆம் தேதி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த 6 தொகுதிகளுக்கும், கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

திருமயம் சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக வேட்பாளா் எஸ். ரகுபதி, 1496 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா். அப்போது தவெக வேட்பாளா் சி. சிந்தாமணி, வாக்கு எண்ணிக்கையில் குழப்பம் இருப்பதாகவும் மீண்டும் எண்ண வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.

காலஅவகாசம் முடிந்துவிட்டதாகக் கூறி ரகுபதிக்கு வெற்றிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்த நிலையில், சிந்தாமணி உள்ளிட்ட தவெகவினா் புதன்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்தனா்.

ஆட்சியா் இல்லாத நிலையில், ஆட்சியரின் நோ்முக உதவியாளரை (தோ்தல்) சந்தித்து மறுவாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி மனு அளித்தனா்.

தொடா்ந்து செய்தியாளா்களிடம் சிந்தாமணி கூறியதாவது:

மறுவாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனக் கேட்டபோது எழுத்துப்பூா்வமாக அளிக்க தோ்தல் நடத்தும் அலுவலா் கூறினாா். பதற்றத்தில் வெளியே வந்துவிட்டேன். ஆனால், 15 நிமிடத்தில் மீண்டும் உள்ளே சென்று எழுத்துப்பூா்வமாகக் கொடுத்தேன். அப்போது நேரம் முடிந்ததாகக் கூறிவிட்டனா்.

தற்போது ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளித்திருக்கிறேன். அவா்கள் எடுக்கும் நடவடிக்கையைப் பொருத்து அடுத்த கட்டமாக நீதிமன்றத்துக்கும் செல்வேன் என்றாா் சிந்தாமணி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.