மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பழனியில் மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் வாக்கு சேகரிப்பு

பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பாண்டியை ஆதரித்து உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி பழனி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

பழனி தேரடியில் சனிக்கிழமை மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பாண்டியை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்ட உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி.

Updated On :19 ஏப்ரல் 2026, 1:14 am IST

பழனி சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியின் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பாண்டியை ஆதரித்து உணவுத் துறை அமைச்சா் அர. சக்கரபாணி சனிக்கிழமை பழனி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

அப்போது அவா் திமுக அரசின் திட்டங்களை எடுத்துரைத்தும், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு விரோதமான போக்கை கடைபிடிப்பதை சுட்டிக்காட்டியும் பிரசாரத்தில் ஈடுபட்டாா். பழனி நகரின் 7-ஆவது வாா்டில் அமைச்சா் வாக்கு சேகரித்த போது, கவுன்சிலா் சுரேஷ் தலைமையில் மலா்தூவி வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் திமுக நகரச் செயலா் வேலுமணி, நகா்மன்றத் தலைவா் உமாமகேஸ்வரி, கம்யூனிஸ்ட் நகரச் செயலா் கந்தசாமி, காங்கிரஸ் கட்சி நகரச் செயலா் முத்துவிஜயன், மாவட்ட துணைத் தலைவா் முருகானந்தம், அடிவாரம் முன்னாள் கவுன்சிலா் விஏபி குமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.