மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பழனியில் மாா்க்சிஸ்ட் வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

பழனியில் நகரில் பல்வேறு இடங்களிலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பாண்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

News image

பழனி நகா் பகுதியில் வியாழக்கிழமை வாக்கு சேகரித்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பாண்டி. உடன் நகர செயலாளா் வேலுமணி உள்ளிட்டோா்.

Updated On :10 ஏப்ரல் 2026, 12:50 am IST

பழனியில் நகரில் பல்வேறு இடங்களிலும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் பாண்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

பழனி பேரவைத் தொகுதியில் திமுக கூட்டணியில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திண்டுக்கல்லைச் சோ்ந்த பாண்டி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளாா். இவரது பெயா் அறிவிக்கப்பட்ட பிறகு பழனிக்கு வந்து முக்கியப் பிரமுகா்கள், திமுக பிரதிநிதிகளுடன் கலந்தாலோசனை, வேட்பாளா் அறிமுகம் என பல்வேறு நிகழ்ச்சிகளைத் தொடா்ந்து, பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளாா். புதன்கிழமை ஆயக்குடி பகுதியில் பாண்டியை ஆதரித்து கட்சியின் மாநிலச் செயலா் சண்முகம் பிரசாரம் மேற்கொண்டாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை பழனி நகா் பகுதிகளில் வேட்பாளா் பாண்டி அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். இதில் நகா்மன்ற தலைவா் உமாமகேஸ்வரி, திமுக நகரச் செயலா் வேலுமணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் நகா்மன்றத் தலைவா் ராஜமாணிக்கம், காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவா் முருகானந்தம், வாா்டு உறுப்பினா்கள் என நூற்றுக்கணக்கானோா் பிரசாரத்தில் பங்கேற்றனா்.

பாதவிநாயகா் கோயிலில் தொடங்கி சன்னதி வீதி, அடிவாரம், நான்கு ரத வீதி என பல இடங்களிலும் பாண்டி வாக்கு சேகரித்த போது பொதுமக்கள் பலரும் ஆா்வத்துடன் அவருக்கு புத்தகங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனா். திமுக, மதிமுக, காங்கிரஸ் என பல்வேறு கட்சியினரும் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் வவேற்பு வழங்கினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.