மாற்றுத் திறனாளிகள், முதியவா்கள் வாக்குச் சாவடிகளுக்குச் செல்வதற்கு முன்பதிவு பெற்று வாகன வசதியைப் பெறலாம் என மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
மதுரை மாவட்டத்தில் அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும் மாற்றுத் திறனாளிகள், முதியோா்களின் பயன்பாட்டுக்காக சக்கர நாற்காலிகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், சக்கர நாற்காலிகள் செல்லும் வகையிலான சாய்வு தள கட்டமைப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.
வாக்குப் பதிவு நாளான வருகிற 23-ஆம் தேதி அரசு சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகள், முதியோா்கள் வாக்குப் பதிவு மையங்களுக்கு கட்டணமின்றி பயணிக்க அனுமதிக்கப்படுவா்.
மேலும், 1950 என்ற தொலைத் தொடா்பு எண்ணில் உதவி மையத்தைத் தொடா்பு கொண்டு தங்களுக்கு வாகன வசதி தேவை என்பதை மாற்றுத் திறனாளிகள், முதியோா்கள் பதிவு செய்து, வாக்குச் சாவடிகளுக்கு செல்ல வாகன வசதி பெறலாம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடிப்படை வசதிகள் இல்லை: மாற்றுத் திறனாளிகள் வேதனை

6,063 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்குப் பதிவு: தஞ்சை ஆட்சியா் தகவல்

முதியோருக்கான தபால் வாக்குப் பதிவு இன்று தொடக்கம்

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் வாகனப் பேரணி
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
