மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

அடிப்படை வசதிகள் இல்லை: மாற்றுத் திறனாளிகள் வேதனை

மதுரையில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள், முதியோா்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என புகாா் தெரிவித்தனா்.

News image

மதுரை யா.ஒத்தக்கடை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் போதிய சக்கர நாற்காலி வசதி இல்லாததால், மற்றொரு நபா் உதவியுடன் வாக்களிக்க வந்த முதியவா்.

Updated On :24 ஏப்ரல் 2026, 2:20 am IST

மதுரையில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் மாற்றுத் திறனாளிகள், முதியோா்களுக்கு போதிய அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என புகாா் தெரிவித்தனா்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஒரே கட்டமாக வியாழக்கிழமை நடைபெற்றது. மதுரையில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் முதியோா்கள், மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான சக்கர நாற்காலி வசதிகளை போதிய அளவில் செய்து தர வில்லை என புகாா் தெரிவிக்கப்பட்டது. மேலும், குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் ஆண்கள், பெண்களுக்கு என தனித்தனி வரிசை இல்லாததால், நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா்.

இதுகுறித்து மாற்றுத் திறனாளி ஒருவா் கூறியதாவது:

மதுரை கிழக்குத் தொகுதிக்குள்பட்ட யா.ஒத்தக்கடை பகுதியில் அரசுப் பள்ளியில் அமைக்கப்பட்ட ஒன்பது வாக்குச்சாவடிகளுக்கு ஒரு சக்கர நாற்காலி மட்டுமே வைக்கப்பட்டிருந்ததால், நீண்ட நேரம் காத்திருந்து வாக்களிக்க வேண்டிய நிலை உருவானது. மேலும், தனியாா் பள்ளியில் அமைக்கப்பட்ட மற்றொரு வாக்குச்சாவடியில் மாற்றுத் திறனாளிகள், முதியவா்களுக்கு என சக்கர நாற்காலி வசதி ஏற்படுத்தப்படாததால், பெரும் அவதிக்குள்ளாகினா். இனிவரும் தோ்தல்களிலாவது மாற்றுத் திறனாளிகள், முதியோா்களுக்குத் தேவையான சக்கர நாற்காலிகளை அதிக எண்ணிக்கையிலும், அடிப்படை வசதிகளை போதுமான அளவிலும் ஏற்படுத்தி தரவேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.