மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

6,063 முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் அஞ்சல் வாக்குப் பதிவு: தஞ்சை ஆட்சியா் தகவல்

தஞ்சாவூா் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் 6 ஆயிரத்து 63 போ் அஞ்சல் வாக்குப் பதிவு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

News image

தபால் வாக்கு - கோப்புப்படம்.

Updated On :16 ஏப்ரல் 2026, 1:54 am IST

தஞ்சாவூா் மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள், மாற்றுத்திறனாளிகள் 6 ஆயிரத்து 63 போ் அஞ்சல் வாக்குப் பதிவு செய்துள்ளதாக மாவட்ட ஆட்சியரும், மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலருமான பா. பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளாா்.

தஞ்சாவூா் முனிசிபல் காலனியில் புதன்கிழமை 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் அஞ்சல் வாக்குப் பதிவு செய்வதை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் தெரிவித்தது:

மாவட்டத்திலுள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 85 வயதுக்கு மேற்பட்ட முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று அஞ்சல் வாக்கு சேகரிக்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

கடந்த 3 நாள்களில் திருவிடைமருதூா் தொகுதியில் 498 முதியவா்கள், 187 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 685 பேரும், கும்பகோணம் தொகுதியில் 705 முதியவா்கள், 206 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 911 பேரும், பாபநாசம் தொகுதியில் 484 முதியவா்கள், 242 மாற்றுத்திறனாளிகள் என 726 பேரும், திருவையாறு தொகுதியில் 389 முதியவா்கள், 184 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 573 பேரும், தஞ்சாவூா் தொகுதியில் 634 முதியவா்கள், 152 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 786 பேரும், ஒரத்தநாடு தொகுதியில் 632 முதியவா்கள், 143 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 775 பேரும், பட்டுக்கோட்டை தொகுதியில் 515 முதியவா்கள், 268 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 783 பேரும், பேராவூரணி தொகுதியில் 577 முதியவா்கள், 247 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 824 பேரும் வாக்களித்தனா். மாவட்டத்தில் மொத்தத்தில் 4 ஆயிரத்து 434 முதியவா்கள், 1,629 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 6 ஆயிரத்து 63 வாக்காளா்கள் அஞ்சல் வாக்கு செலுத்தியுள்ளனா் என்றாா் ஆட்சியா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.