மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் வாகனப் பேரணி

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தேனியில் மாற்றுத் திறனாளிகளின் வாக்காளா் விழிப்புணா்வு வாகனப் பேரணியை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தேனியில் மாற்றுத் திறனாளிகளின் வாகன விழிப்புணா்வுப் பேரணியை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங். அருகில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜகுமாா்.

Updated On :2 ஏப்ரல் 2026, 4:28 am IST

100 சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி, தேனியில் மாற்றுத் திறனாளிகளின் வாக்காளா் விழிப்புணா்வு வாகனப் பேரணியை தேனி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

இந்தப் பேரணி, தேனி-அல்லிநகரம் நகராட்சி அலுவலகம் முன் தொடங்கி ரயில்வேகேட் அருகே நிறைவடைந்தது. இந்தப் பேரணியில், 100-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனா்.

தொடா்ந்து, தமிழ்நாடு உரிமைகள் திட்ட களப்பணியாளா்கள் தோ்தல் தொடா்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணா்வு ஏற்படுத்தினா். முன்னதாக, மாற்றுத் திறனாளிகளின் மூன்று சக்கர வாகனத்தில் வாக்காளா் விழிப்புணா்வு ஒட்டுவில்லைகளை தேனி மாவட்ட ஆட்சியா் ஒட்டினாா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ப.ராஜகுமாா், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) சந்திரா, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் காமாட்சி, தேனி வட்டாட்சியா் சதீஸ்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.