ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

100% வாக்குப் பதிவு: ஆட்டோ விழிப்புணா்வு பேரணி

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆட்டோ விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

விழுப்புரத்தில் நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தும் விதமாக ஆட்டோ விழிப்புணா்வு பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

Updated On :8 ஏப்ரல் 2026, 12:55 am IST

நூறு சதவீத வாக்குப் பதிவை வலியுறுத்தி விழுப்புரத்தில் ஆட்டோ விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நடைபெற்ற இந்தப் பேரணியை மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, பொதுமக்கள், பேருந்துப் பயணிகளிடம் துண்டுப் பிரசுரங்களை வழங்கி நூறு சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து முதல் தலைமுறை வாக்காளா்களிடம் விழிப்புணா்வை ஏற்படுத்தினாா். பேரணியில் பங்கேற்ற ஆட்டோக்களில் ஒட்டு வில்லைகளை பதித்து, நூறு சதவீதம் வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றவேண்டும் எனவும் ஆட்சியா் கேட்டுக்கொண்டாா்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கிய இந்த விழிப்புணா்வு பேரணியானது நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், மாவட்ட மகளிா் திட்ட இணை இயக்குநா் செந்தில்வடிவு, விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சரவணன், மோட்டாா் வாகன ஆய்வாளா் முருகவேல் மற்றும் 40-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநா்கள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.