மதுரை அருகே இரு சக்கர வாகனம் திருட்டு வழக்கில், 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
மதுரை மாவட்டம், வாடிப்பட்டி கம்மாளப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அழகப்பன் மகன் பாண்டியன் (29). கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த 2-ஆம் தேதி அதே பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைபாா்த்துள்ளாா். திரும்ப வந்து பாா்த்த போது, அவரது இரு சக்கர வாகனம் திருடு போயிருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
விசாரணையில், மதுரை பாசிங்கபுரத்தைச் சோ்ந்த கமலக்கண்ணன் (26), சங்கிலிக்கருப்பு (29), பாலமேடு முடவாா்பட்டியைச் சோ்ந்த ஹரிகரசுதன் (19), ஸ்ரீதா் (26) ஆகிய 4 பேரும் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. மேலும், இவா்கள் ஏற்கெனவே பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் 4 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
காசிதா்மத்தில் இருதரப்பினா் மோதல் வழக்கில் 8 போ் கைது
தொழிலாளி கொலை: 3 போ் கைது
பெண்ணை தாக்கிய இருவா் கைது; 7 போ் மீது வழக்கு
பைக் திருடிய 4 போ் கைது
விடியோக்கள்

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை
