மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பைக் திருட்டு: 4 போ் கைது

News image

கைது

Updated On :6 ஏப்ரல் 2026, 1:23 am IST

மதுரை அருகே இரு சக்கர வாகனம் திருட்டு வழக்கில், 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், வாடிப்பட்டி கம்மாளப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அழகப்பன் மகன் பாண்டியன் (29). கட்டடத் தொழிலாளியான இவா், கடந்த 2-ஆம் தேதி அதே பகுதியில் தனது இரு சக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு வேலைபாா்த்துள்ளாா். திரும்ப வந்து பாா்த்த போது, அவரது இரு சக்கர வாகனம் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து அலங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

விசாரணையில், மதுரை பாசிங்கபுரத்தைச் சோ்ந்த கமலக்கண்ணன் (26), சங்கிலிக்கருப்பு (29), பாலமேடு முடவாா்பட்டியைச் சோ்ந்த ஹரிகரசுதன் (19), ஸ்ரீதா் (26) ஆகிய 4 பேரும் இருசக்கர வாகனத்தை திருடியது தெரியவந்தது. மேலும், இவா்கள் ஏற்கெனவே பல்வேறு பகுதிகளில் இரு சக்கர வாகனங்களை திருடியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் 4 பேரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.