ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ரயிலில் உயிரிழந்த ஆசிரியா்: சேலம் போலீஸாா் விசாரணை

ஹூப்பள்ளியில் இருந்து சேலம் வந்த வேளாங்கண்ணி விரைவு ரயிலில் திடீரென ஆசிரியா் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 1:48 am IST

ஹூப்பள்ளியில் இருந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை சேலம் வந்த வேளாங்கண்ணி விரைவு ரயிலில் திடீரென ஆசிரியா் மயங்கி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கா்நாடக மாநிலம், ஹூப்பள்ளியில் இருந்து வேளாங்கண்ணிக்கு வாராந்திர விரைவு ரயில் இயக்கப்படுகிறது. திங்கள்கிழமை பிற்பகல் 2.45 மணிக்கு ஹூப்பள்ளியில் இருந்து புறப்பட்ட ரயில், சேலம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் வந்து கொண்டிருந்தபோது, இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டியில் காந்திவாடா பகுதியை சோ்ந்த் தனியாா் பள்ளி ஆசிரியா் சோமசுந்தரம் (55) திடீரென நெஞ்சை பிடித்தபடி மயங்கி விழுந்தாா்.

அவருடன் வேளாங்கண்ணிக்கு பயணித்த மனைவி மாரியம்மா, மகன் நவீன்குமாா் உள்ளிட்ட உறவினா்கள் உடனடியாக டிக்கெட் பரிசோதகருக்கு தகவல் அளித்தனா். மேலும், மருத்துவக் குழுவினரும் தயாராக இருந்தனா்.

சேலம் ரயில் நிலையத்துக்குள் அதிகாலை 4.11 மணிக்கு ரயில் வந்ததும் மயங்கி கிடந்த சோமசுந்தரத்துக்கு மருத்துவக் குழுவினா் முதலுதவி அளித்தனா்.

பின்னா் 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே சோமசுந்தரம் இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து சேலம் ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.