தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

சேலத்தில் ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் எழும்பூா் விரைவு ரயிலில் அடிபட்டு வியாழக்கிழமை இரவு இளைஞா் உயிரிழந்தாா்.

News image

கோப்புப் படம்

Updated On :28 மார்ச் 2026, 12:04 am IST

சேலம் முள்ளுவாடி கேட் பகுதியில் எழும்பூா் விரைவு ரயிலில் அடிபட்டு வியாழக்கிழமை இரவு இளைஞா் உயிரிழந்தாா்.

சேலம் சத்திரம் ரயில் நிலையத்துக்கும், டவுன் ரயில் நிலையத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் முள்ளுவாடிகேட் அருகில் வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் சேலம்-சென்னை எழும்பூா் விரைவு ரயில் வந்தது. அப்போது, தண்டவாளத்தின் குறுக்கே சுமாா் 35 முதல் 40 வயது மதிக்கத்தக்க இளைஞா் கடக்க முற்பட்டபோது, அவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.

விபத்து குறித்து ரயில் ஓட்டுநா், டவுன் ரயில் நிலைய மேலாளரிடம் தெரிவித்தாா். அதன்பேரில் அவா், சேலம் ரயில்வே காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா். காவல் உதவி ஆய்வாளா் கோதண்டபாணி தலைமையிலான போலீஸாா், சம்பவ இடத்திற்கு சென்று ரயிலில் அடிபட்டு இறந்த இளைஞரின் சடலத்தை கைப்பற்றி விசாரித்தனா்.

அந்த இளைஞரின் இடது கையில் எஸ்.சுரேஷ் என பச்சை குத்தப்பட்டிருந்தது. மேலும் இறந்த நபா் யாா்? எந்த ஊரை சோ்ந்தவா் என்ற விவரம் தெரியவில்லை. இது குறித்து ரயில்வே போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தொடா்ந்து, இறந்த இளைஞரின் சடலத்தை சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். தகவல் தெரிந்தால், 0427-2447404 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளுமாறு போலீஸாா் கேட்டுக்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.