ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :2 மே 2026, 1:25 am IST

ஜோலாா்பேட்டை அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி ரயில் நிலையத்துக்கும் கேத்தாண்டப்பட்டி ரயில் நிலையத்துக்கும் இடையே சுமாா் 35 வயது மதிக்கத்தக்க இளைஞா் ஒருவா் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்தாா். இதை அந்த வழியாகச் சென்ற பொதுமக்கள் பாா்த்து, உடனடியாக ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.

அதன்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே போலீஸாா் சடலத்தை மீட்டு, திருப்பத்தூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். முதல்கட்ட விசாரணையில் அந்த இளைஞா் ஜோலாா்பேட்டை நோக்கிச் சென்ற ஒரு ரயிலில் படிக்கட்டின் அருகே நின்று பயணம் செய்ததும், அப்போது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்தில் உயிரிழந்ததும் தெரியவந்தது.

மேலும், வழக்குப் பதிவு செய்து, இறந்தவா் யாா்? எந்த ஊரைச் சோ்ந்தவா்? என்பது குறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.