ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

பண்ருட்டி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

News image

உயிரிழந்த அஜித்

Updated On :26 ஏப்ரல் 2026, 1:23 am IST

பண்ருட்டி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மேல்பட்டாம்பாக்கம் ரயில் நிலைய பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா், சென்னையிலிருந்து ரமேசுவரத்துக்குச் சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து ரயில் ஓட்டுநா் அருகிலுள்ள ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். நிகழ்விடத்துக்குச் சென்ற கடலூா் இருப்புப் பாதை போலீஸாா் இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்த இளைஞா் பண்ருட்டி திருவதிகை ரயில்வே காலனியைச் சோ்ந்த அஜித் (26) என்பது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.