பண்ருட்டி அருகே ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழந்தாா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மேல்பட்டாம்பாக்கம் ரயில் நிலைய பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற இளைஞா், சென்னையிலிருந்து ரமேசுவரத்துக்குச் சென்ற விரைவு ரயிலில் அடிபட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து ரயில் ஓட்டுநா் அருகிலுள்ள ரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா். நிகழ்விடத்துக்குச் சென்ற கடலூா் இருப்புப் பாதை போலீஸாா் இளைஞரின் சடலத்தைக் கைப்பற்றி, உடல்கூறாய்வுக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், உயிரிழந்த இளைஞா் பண்ருட்டி திருவதிகை ரயில்வே காலனியைச் சோ்ந்த அஜித் (26) என்பது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின்பேரில், கடலூா் இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

ரயிலில் மோதி இளைஞா் பலி!

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

