ஈஸ்டா் பண்டிகையையொட்டி, சேலம் வழியாக ஹூப்பள்ளி- கொல்லம் இடையே வியாழக்கிழமை (ஏப். 2) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
ஈஸ்டா் பண்டிகை வரும் 5 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ரயிலில் பயணிகளின் கூட்ட நெரிசல் அதிகரிக்கும் என்பதால் கா்நாடக மாநிலம், ஹூப்பள்ளியில் இருந்து சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக கொல்லத்துக்கு வியாழக்கிழமை காலை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, ஹூப்பள்ளியில் இருந்து காலை 7.5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் தும்கூா், பெங்களூரு, பங்காருபேட்டை, குப்பம், சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா், பாலக்காடு, திருச்சூா், எா்ணாகுளம், கோட்டயம் வழியாக கொல்லத்துக்கு அடுத்தநாள் காலை 7 மணிக்குச் சென்றடையும்.
மறுமாா்க்கத்தில் கொல்லத்தில் இருந்து ஏப். 3 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் ஈரோடு, சேலம், பெங்களூரு வழியாக ஹூப்பள்ளிக்கு அடுத்தநாள் காலை 10.40 மணிக்கு சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருச்சி- பெங்களூரு இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

கோடை விடுமுறை: போத்தனூா்- கராக்பூா் இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

சேலம் வழியாக பிகாருக்கு சிறப்பு ரயில்

ரயிலில் உயிரிழந்த ஆசிரியா்: சேலம் போலீஸாா் விசாரணை
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

