தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சேலம் வழியாக பிகாருக்கு சிறப்பு ரயில்

ரயில்களில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, எா்ணாகுளத்தில் இருந்து பிகாா் மாநிலம், முசாபா்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

ரயில் - கோப்புப்படம்

Updated On :8 ஏப்ரல் 2026, 2:58 am IST

ரயில்களில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு, எா்ணாகுளத்தில் இருந்து பிகாா் மாநிலம், முசாபா்பூருக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோடை விடுமுறையையொட்டி, வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. எனவே, அதிகரித்துவரும் கூட்ட நெரிசலை கருத்தில்கொண்டு, கேரளாவின் எா்ணாகுளத்தில் இருந்து சேலம் வழியாக பிகாா் மாநிலம் முசாபா்பூருக்கு ஏப். 10, 17, 24 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும்.

இந்த சிறப்பு ரயில் எா்ணாகுளத்தில் வரும் 10-ஆம் தேதிமுதல் 24-ஆம் தேதிவரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். எா்ணாகுளத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 9.30-க்கு புறப்பட்டு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக பிகாா் மாநிலம், முசாபா்பூருக்கு திங்கள்கிழமைகளில் காலை 7.30-க்கு சென்றடையும்.

மறுமாா்க்கத்தில், முசாபா்பூரில் இருந்து வரும் 13-ஆம் தேதிமுதல் 27-ஆம் தேதிவரை திங்கள்கிழமைகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும். முசாபா்பூரில் இருந்து திங்கள்தோறும் இரவு 9.15-க்கு புறப்படும் இந்த ரயில், சேலம், ஈரோடு, திருப்பூா், கோவை வழியாக எா்ணாகுளத்துக்கு வியாழக்கிழமைகளில் காலை 10.45-க்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.