ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

ஹைதராபாத்- கொல்லம் சிறப்பு ரயில்: மேலும் 2 மாதங்களுக்கு நீட்டிப்பு

சேலம் வழியாக இயக்கப்படும் ஹைதராபாத்- கொல்லம் சிறப்பு ரயில் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image

(கோப்புப்படம்)

Updated On :4 ஏப்ரல் 2026, 1:10 am IST

சேலம் வழியாக இயக்கப்படும் ஹைதராபாத்- கொல்லம் சிறப்பு ரயில் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் இருந்து கா்நாடகம், ஆந்திரம் வழியாக வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருவதால் முக்கிய நகரங்களுக்கு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. அந்தவகையில், ஹைதராபாத்- கொல்லம் இடையே ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரயில் மேலும் இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஹைதராபாத்தில் இருந்து சனிக்கிழமை (ஏப். 4) இரவு 11.10 மணிக்குப் புறப்படும் இந்த ரயில் கொல்லத்துக்கு திங்கள்கிழமை காலை 7.10 மணிக்கு சென்றடையும். சனிக்கிழமைதோறும் ஹைதராபாத்தில் இருந்து புறப்படுகிறது. மே 23 ஆம் தேதி வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மறுமாா்க்கத்தில் கொல்லத்தில் இருந்து வரும் 6 ஆம் தேதி காலை 10.45 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் எா்ணாகுளம் பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், சேலம் வழியாக ஹைதராபாத்தை செவ்வாய்க்கிழமை மாலை 5.30 மணிக்கு சென்றடையும். இந்த ரயில் மே 25 ஆம் தேதி வரை திங்கள்கிழமைதோறும் இயக்கப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.