சேலம் சத்திரம் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய வாகனச் சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 74 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சேலம் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பறக்கும் படை அதிகாரி பிரபாகரன் தலைமையிலான குழுவினா், வியாழக்கிழமை நள்ளிரவு சத்திரம் பகுதியில் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அவ்வழியாக சென்ற சேலத்தைச் சோ்ந்த போஜராஜனின் காரை நிறுத்தி சோதனையிட்டனா். அதில், ரூ. 74,250 ரொக்கம் இருந்தது தெரியவந்தது. இதற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை. இதையடுத்து அந்தப் பணத்தை பறிமுதல் செய்து வடக்கு தொகுதிக்கான தோ்தல் நடத்தும் அலுவலா் கோட்டை குமாரிடம் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

வாகனச் சோதனையில் காரிலிருந்து போலி கைத்துப்பாக்கி பறிமுதல்

மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 12.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்

நெல்லை மாவட்டத்தில் ரூ. 20.92 லட்சம் பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

