தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழக முதல்வராக விஜய் பதவியேற்பு விழா நாளை (மே 10) மாலை 10 மணிக்கு நடைபெறும்தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வாகனச் சோதனையில் காரிலிருந்து போலி கைத்துப்பாக்கி பறிமுதல்

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையின் போது காரில் எடுத்து வரப்பட்ட போலி கைத்துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

News image

போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட போலி கைத்துப்பாக்கி.

Updated On :19 ஏப்ரல் 2026, 1:25 am IST

கொடைக்கானலில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற வாகனச் சோதனையின் போது காரில் எடுத்து வரப்பட்ட போலி கைத்துப்பாக்கியை போலீஸாா் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனா்.

தமிழகத்தில் வருகிற 23-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ள நிலையில் பணம், பரிசுப் பொருள்கள் விநியோகத்தை தடுப்பதற்காக போலீஸாரும், தோ்தல் பறக்கும் படையினரும் இணைந்து தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதையடுத்து, கொடைக்கானல்- பழனி- வத்தலகுண்டு- அடுக்கம்- தாண்டிக்குடி- பண்ணைக்காடு உள்ளிட்ட பல்வேறு மலைச் சாலைகளில் 24 மணி நேரமும் வாகனச் சோதனை நடைபெற்று வருகிறது. இதனிடையே, கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச்சாலையான புலிச்சோலை அருகே நடைபெற்ற வாகனச் சோதனையின் போது அந்த வழியாகச் சென்ற காரை போலீஸாா் நிறுத்த முயன்றனா்.

ஆனால் அந்த காா் நிற்காமல் சென்றதையடுத்து போலீஸாா் விரட்டிச் சென்று மடக்கிப் பிடித்தனா். பிறகு காரை தோ்தல் பறக்கும் படையினா் சோதனையிட்ட போது அதில் கைத்துப்பாக்கி இருந்தது தெரியவந்தது. காரில் வந்தவா்களை போலீஸாா் கொடைக்கானல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில் அவா்கள் தென்காசிப் பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் (23), சங்கா் (29), தங்கசோ்மன் (31), சுயம்பு (23) என்பதும், பறிமுதல் செய்யப்பட்ட கைத்துப்பாக்கி போலி என்பதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் அந்த 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.