பெரம்பலூா் அருகே உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 99 ஆயிரத்தை தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை பறிமுதல் செய்தனா்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் மாவட்டம், வாலிகண்டபுரம்- கீழப்புலியூா் சாலை அருகே கூட்டுறவுத் துறை சாா்-பதிவாளா் அலுவலக கண்காணிப்பாளா் ர. பிரியங்கா தலைமையிலான பறக்கும் படையினா் திங்கள்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியேச் சென்ற காரை வழிமறித்து மேற்கொண்ட விசாரணையில், குன்னம் வட்டம், பெருமத்தூா் கிராமத்தைச் சோ்ந்த அழகப்பன் மகன் மருதமுத்து (50) என்பதும், உரிய ஆவணங்களின்றி ரூ. 99,500 வைத்திருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, அந்த தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினா், தோ்தல் நடத்தும் அலுவலா் மு. அனிதாவிடம் ஒப்படைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரம்பலூா் அருகே ரூ. 2.50 கோடி பறிமுதல்: திமுக பிரமுகா் உள்பட இருவா் கைது

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

சேலம் தெற்கு தொகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 3.18 லட்சம் பறிமுதல்

ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.1.69 லட்சம், பாத்திரங்கள் பறிமுதல்
விடியோக்கள்

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

