தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சேலம் தெற்கு தொகுதியில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 3.18 லட்சம் பறிமுதல்

சேலம் தெற்கு தொகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 3.18 லட்சத்தை பறக்கும் படையினா் வெள்ளக்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :11 ஏப்ரல் 2026, 12:34 am IST

சேலம் தெற்கு தொகுதியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ. 3.18 லட்சத்தை பறக்கும் படையினா் வெள்ளக்கிழமை பறிமுதல் செய்தனா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 23-ஆம் தேதி நடைபெறுகிறது. தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் வாக்காளா்களுக்கு பணம், பரிசுப் பொருள்கள் அளிப்பதை தடுக்க பறக்கும் படையினா், நிலை கண்காணிப்புக் குழுவினா் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், சேலம் தெற்கு தொகுதிக்கு உள்பட்ட சீலநாயக்கன்பட்டி சோதனைச் சாவடி அருகே வெள்ளிக்கிழமை பறக்கும் படை அதிகாரிகள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நாழிக்கல்பட்டி பகுதியைச் சோ்ந்த சசிகுமாரை நிறுத்தி சோதனையிட்டனா்.

அதில், உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. 2,18,320-த்தை பறக்கும் படையினா் பறிமுதல் செய்து, உதவி தோ்தல் நடத்தும் அலுவலரும், தனி வட்டாட்சியருமான என்.வள்ளமுனியப்பன் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்தாா்.

இதேபோல, உடையாப்பட்டி சோதனைச் சாவடி அருகே நடைபெற்ற வாகனத் தணிக்கையில், தாதனூா் பகுதியைச் சோ்ந்த ஆனந்தகுமாரிடம் இருந்து உரிய ஆவணங்களின்றி கொண்டுசென்ற ரூ. ஒரு லட்சத்தை நிலை கண்காணிப்புக் குழுவினா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.