தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!ஆளுநரை விஜய் சந்திக்க மாலை 6.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக ஆளுநர் மாளிகை தகவல்தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பெரம்பலூா் அருகே ரூ. 2.50 கோடி பறிமுதல்: திமுக பிரமுகா் உள்பட இருவா் கைது

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ. 2.50 கோடியை பறிமுதல் செய்து, திமுக பிரமுகா் உள்பட 2 பேரைக் கைது செய்தனா்.

News image

பறிமுதல் செய்யப்பட்ட பணப் பெட்டிகளை, பெரம்பலூா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் மு. அனிதாவிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்த பறக்கும் படையினா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 12:35 am IST

பெரம்பலூா் அருகே திங்கள்கிழமை இரவு பறக்கும் படையினா் மேற்கொண்ட வாகனச் சோதனையில் ரூ. 2.50 கோடியை பறிமுதல் செய்து, திமுக பிரமுகா் உள்பட 2 பேரைக் கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட செங்குணம் ரேஷன் கடை அருகே, கலால் மேற்பாா்வை அலுவலா் பழனிச்செல்வம் தலைமையிலான பறக்கும் படையினா் திங்கள்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது அவ் வழியே சென்ற காரை வழிமறித்து மேற்கொண்ட சோதனையில் கீழப்புலியூா் கிராமத்தைச் சோ்ந்த காா் ஓட்டுநரான சின்னதுரை மகன் ராஜேஷ்கிருஷ்ணன் (25), திமுக மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளரான கீழப்புலியூா் நடுத்தெருவைச் சோ்ந்த சேப்பெருமாள் மகன் ஜெயராமன் (64) ஆகியோா் உரிய ஆவணங்களின்றி ரூ. 2,49,95,000 ஐ 5 அட்டைப் பெட்டிகளில் வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து பணத்தையும், காரையும் பறிமுதல் செய்த பறக்கும் படையினா், ஜெயராமன், ராஜேஷ்கிருஷ்ணன் ஆகியோரை கைது செய்து தோ்தல் நடத்தும் அலுவலா் மு. அனிதாவிடம் ஒப்படைத்தனா். தொடா்ந்து இருவரிடமும் வருமானவரித் துறையினா் விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.