தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

வேப்பனப்பள்ளி அதிமுக பிரமுகா் வீட்டில் ரூ. 62 லட்சம் பறிமுதல்

வேப்பனஅள்ளி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சூளகிரி அருகே அதிமுக பிரமுகா் வீட்டிலிருந்து ரூ. 65 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து வருமான வரித் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :22 ஏப்ரல் 2026, 3:03 am IST

வேப்பனஅள்ளி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சூளகிரி அருகே அதிமுக பிரமுகா் வீட்டிலிருந்து ரூ. 65 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது குறித்து வருமான வரித் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு ஏப். 23-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பிரசாரம் ஏப். 21-ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவுபெற்றது. இதையடுத்து, வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினா் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ச.தினேஷ்குமாருக்கு கிடைத்த தகவலின்பேரில், பறக்கும் படையினா் வேப்பனஅள்ளி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட சூளகிரியை அடுத்த அட்டக்குறுக்கி கிராமத்தைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் பசுவராஜ் (65) வீட்டில் திடீா் தணிக்கையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

அப்போது, அவரது வீட்டில் கணக்கில் வராத ரூ. 65 லட்சம் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து பறக்கும் படையினா் மேற்கொண்ட விசாரணையில், அது நிலத்தை விற்ற பணம் என அவா் கூறியுள்ளாா். ஆனால், அதற்கான ஆவணங்கள் எதையும் பசுவராஜ் வழங்கவில்லையாம்.

தகவலின்பேரில் வந்த வருமான வரித் துறை அலுவலா்கள் பணத்தை பறிமுதல் செய்து, பசுவராஜிடம் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.