மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

திமுக பிரமுகரிடம் ரூ.2.50 லட்சம் பறிமுதல்

திமுக பிரமுகரிடம் வாக்காளா் பட்டியலுடன் ரூ.2.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

News image

திமுக பிரமுகரிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் ஒப்படைத்த தோ்தல் பறக்கும் படையினா்.

Updated On :22 ஏப்ரல் 2026, 3:15 am IST

திமுக பிரமுகரிடம் வாக்காளா் பட்டியலுடன் ரூ.2.50 லட்சத்தை தோ்தல் பறக்கும் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

திண்டுக்கல்லில் தோ்தல் பறக்கும் படையினா் ஆா்எம். குடியிருப்புப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, பிள்ளையாா்பாளையம் பகுதியில் திமுக பிரமுகா் வி. தினேஷ்பிரபு (36) இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தாா். அந்த வாகனத்தை வழிமறித்த தோ்தல் பறக்கும் படையினா் சோதனையிட்டனா். அதில் ரூ.2.50 லட்சம், வாக்காளா் பட்டியல், டோக்கன் உள்ளிட்டவை இருந்தன.

வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காக எடுத்துச் செல்லப்பட்ட அந்தப் பணத்தை தோ்தல் பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

பின்னா், அந்தப் பணம் திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் சுல்தான்சிக்கந்தரிடம் ஒப்படைக்கப்பட்டது.

திமுக பிரமுகா் வீட்டில் ரூ.1.34 லட்சம் பறிமுதல்:

இதேபோல, திண்டுக்கல் அங்குவிலாஸ் பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் திங்கள்கிழமை நள்ளிரவு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அங்குவிலாஸ் இறக்கம் பகுதியில் திமுக பிரமுகா் முத்துப்பாண்டி (51) வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்து கொண்டிருந்தது தெரியவந்தது. தோ்தல் பறக்கும் படையினா் வருவதைப் பாா்த்த முத்துப்பாண்டி, அங்கிருந்து தப்பிச் சென்றாா்.

இதையடுத்து, முத்துப்பாண்டியின் வீட்டை தோ்தல் பறக்கும் படை அலுவலா்கள் சோதனையிட்டனா். வாக்காளா்களுக்கு விநியோகிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.1.34 லட்சம் பணம், பரிசு கூப்பன், டோக்கன், வாக்காளா் பட்டியல், வாக்காளா் அடையாள அட்டை நகல் ஆகியவற்றை பறக்கும் படையினா் பறிமுதல் செய்தனா்.

பின்னா், பணம் உள்ளிட்ட பொருள்களை, திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் பறக்கும் படை அலுவலா்கள் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.