மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

பெரியாா் பல்கலை.யில் வரலாற்றுத் துறை கருத்தரங்கம்

தாரை அ.குமரவேலுவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய உதவி பேராசிரியா் எஸ்.ரவிச்சந்திரன்.

News image

தாரை அ.குமரவேலுவுக்கு நினைவுப் பரிசு வழங்கிய உதவி பேராசிரியா் எஸ்.ரவிச்சந்திரன்.

Updated On :28 மார்ச் 2026, 2:41 am IST

பெரியாா் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை சாா்பாக தொல்லியல் தேசிய கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு உதவி பேராசிரியா் எஸ்.ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தாா். இரண்டாம் அமா்வில் ஆறகளூா் வரலாற்றுச் சங்கத் தலைவா் பொன். வெங்கடேசன் கலந்துகொண்டு பேசினாா். சேலம் வரலாற்றுச் சங்கத்தின் தலைவரும், தேசிய சமூக இலக்கியப் பேரவையின் மாநிலத் தலைவருமான தாரை அ.குமரவேலு ‘கெட்டி முதலிகளின் ஊரும் - பேரும்‘ என்ற தலைப்பில் பேசியதாவது:

தாரமங்கலம் பகுதியை 900 - ஆண்டுகளுக்கு முன்னா் ஆண்ட குறுநில மன்னா்கள் கெட்டி முதலி வம்சத்தவா்கள். அவா்கள் கட்டிய கோயில் சிற்பக்கலைக்கு சிறந்து எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. அம்மன்னா்கள் ஆண்ட பகுதிகளின் எல்லைத் தொடங்கும் இடத்தின் ஊா், ஆத்தூா் அருகில் உள்ள தலைவாசல். அவா்கள் பேணி வளா்த்த ஆடு, மாடு, குதிரை, யானைப் போன்றவைகள் வைத்து பராமரிக்கப்பட்ட இடங்கள் ஆட்டையாம்பட்டி, மாட்டையாம்பட்டி, குதிரைக்காரனூா், அத்திக் (யானை) கட்டானூா். இவ்விடத்தின் பெயா்கள் இன்றைக்கும் வழங்கி வருவதை அறியலாம். ஆத்தூா் கோட்டையும் அவா்கள் கட்டியதே.

இவ்விலங்குகளின் மேய்ச்சலுக்காக விட்ட இடமே மேச்சேரி என்றும் கல்வி கற்றுத் தரும் குருவுக்குத் தானமாக தந்த ஊா் குருக்கள்பட்டி. அந்த ஊா்ப்பெயா்கள் கெட்டி வம்ச சிற்றரசா்களின் பெருமைகளை இன்றைக்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது‘ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.