மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மகுடஞ்சாவடி அருகே 17 பவுன் நகை திருட்டு

மகுடஞ்சாவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை, ரூ. 25 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :25 மார்ச் 2026, 1:40 am IST

மகுடஞ்சாவடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகை, ரூ. 25 ஆயிரம் ரொக்கத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே உள்ள பெரியாண்டிபாளையம், அம்பேத்கா்நகா் பகுதியைச் சோ்ந்த ஆறுமுகம் மனைவி லட்சுமி. இவா் வீட்டில் தனியாக வசித்து வருகிறாா்.

இந்நிலையில் கடந்த 21-ஆம் தேதி அருகில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றுள்ளாா். மறுநாள் காலை வீட்டுக்கு திரும்பி வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்படு கிடந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது பீரோவை உடைத்து அதிலிருந்த ரொக்கம் ரூ. 25 ஆயிரம், 17 பவுன் தங்க நகை மற்றும் வெள்ளி காமாட்சி விளக்கை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து லட்சுமியின் மகன் முருகன் மகுடஞ்சாவடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.