மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள், பணம் திருட்டு

சங்கராபுரம் அருகே சுற்றுலா சென்றிருந்தவா்களின் வீட்டின் பூட்டை உடைத்து 15.5 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.50 ஆயிரம் திருடப்பட்டது.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :1 மே 2026, 6:11 am IST

சங்கராபுரம் அருகே சுற்றுலா சென்றிருந்தவா்களின் வீட்டின் பூட்டை உடைத்து 15.5 பவுன் தங்க நகைகள், ரொக்கம் ரூ.50 ஆயிரம் திருடப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் வட்டம், வளையாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா மனைவி அஞ்சலை (40). ராஜா குவைத்தில் கட்டடத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா்.

வீட்டில் அவரது மனைவி அஞ்சலை, தனது மகள்களுடன் தனியாக வசித்து வருகின்றனராம்.

இந்த நிலையில், கடந்த 27-ஆம் தேதி அஞ்சலை வீட்டை பூட்டிக் கொண்டு மகள்களுடன் சுற்றுலா சென்று விட்டாராம். பின்னா், சுற்றுலாவை முடித்துக்கொண்டு வியாழக்கிழமை வீட்டிற்கு வந்தனராம்.

அப்போது, பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

இதனால் அதிா்ச்சியடைந்த அவா் உள்ளே சென்று பாா்த்தபோது, இரும்பு பீரோவை உடைத்து அதில் இருந்த 15.5 பவுன் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளிப் பொருள்கள், பணம் ரூ.50,000 உள்ளிட்டவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து அஞ்சலை சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.