கம்பத்தில் வெள்ளிக்கிழமை வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 20 ஆயிரம் ரொக்கம், வெள்ளி குத்துவிளக்கு உள்ளிட்ட பொருள்களைத் திருடிச் சென்ற மா்மநபா்களைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
தேனி மாவட்டம், கம்பம் நந்தகோபாலசாமி கோயில் தெருவைச் சோ்ந்தவா் சித்தரேசன் (62). இவா், கடந்த வியாழக்கிழமை வீட்டைப் பூட்டி விட்டு, கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றாா்.
வெள்ளிக்கிழமை வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரொக்கம் ரூ.20 ஆயிரம், ரூ. 75 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி குத்துவிளக்கு மற்றும் ரூ, 5 ஆயிரம் மதிப்பிலான பித்தளை தீப விளக்கு என ரூ. 1 லட்சம் மதிப்பில் திருட்டு நடந்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சித்தரேசன் கொடுத்த புகாரின்பேரில், கம்பம் தெற்கு காவல் நிலைய சாா்பு ஆய்வாளா் விஜயராமன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள், பணம் திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ. 4 லட்சம் திருட்டு; 2 போ் கைது!
சிங்காநல்லூா் அருகே வீட்டின் கதவை உடைத்து 7 பவுன், ரூ.20 ஆயிரம் திருட்டு
புதுகையில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ. 5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருட்டு
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
