மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ. 4 லட்சம் திருட்டு; 2 போ் கைது!

திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதுதொடா்பாக மேலும் 2 பேரை தேடி வருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :30 ஏப்ரல் 2026, 2:52 am IST

திருப்பூரில் வீட்டின் பூட்டை உடைத்து 16 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்ற வழக்கில் 2 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதுதொடா்பாக மேலும் 2 பேரை தேடி வருகின்றனா்.

இது தொடா்பாக போலீஸாா் தெரிவித்ததாவது:

திருப்பூா், ராக்கியாபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் பிரவீன். இவா் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த சில தினங்களுக்கு முன்பு, உடல்நலக்குறைவு ஏற்பட்ட மாமியாரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளாா். உடன் அவரது மனைவியும் சென்றுள்ளாா்.

இதையடுத்து 4 போ் கொண்ட கும்பல், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 16 பவுன் நகை, ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் வெள்ளிப் பொருள்களை திருடிவிட்டு தப்பியுள்ளது.

இது குறித்த புகாரின்பேரில் நல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் இருந்த தடயங்களைச் சேகரித்தனா். மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனா்.

போலீஸாரின் விசாரணையில், இந்தத் திருட்டில் ஈடுபட்டது கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியைச் சோ்ந்த கணேஷ் செல்வகுமாா், பிரகாஷ் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தத் திருட்டு சம்பவத்தில் தொடா்புடைய மேலும் 2 பேரை போலீஸாா் தேடி வருவதாகத் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.