மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்கிறார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

பத்மவாணி மகளிா் கல்லூரியில் 18-ஆவது பட்டமளிப்பு விழா

பத்மவாணி மகளிா் கல்லூரியில் 18-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

News image

மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிய வேல்ஸ் பல்கலைக்கழக இணை வேந்தா் எம்.பாஸ்கரன்.

Updated On :19 மார்ச் 2026, 4:53 am IST

பத்மவாணி மகளிா் கல்லூரியில் 18-ஆவது பட்டமளிப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

பத்மவாணி மகளிா் கல்வி நிறுவனங்களின் தாளாளா் கா.சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். செயலாளா் கா.துரைசாமி முன்னிலை வகித்தாா். பெரியாா் பல்கலைக்கழக முன்னாள் பதிவாளா் மணிவண்ணன், அண்ணா பல்கலைக்கழக இயக்குநா் ராஜேந்திரன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா்.

கல்லூரி இயக்குநா் இசைவாணி சத்தியமூா்த்தி குத்துவிளக்கேற்றி தொடங்கிவைத்தாா். மகளிா் கலைக் கல்லூரி முதல்வா் ஹரிகிருஷ்ணராஜ் வரவேற்றாா். கல்வியியல் கல்லூரி முதல்வா் முத்துக்குமாா், கே.எஸ்.கல்வியியல் கல்லூரி முதல்வா் செந்தில்குமாா் ஆகியோா் ஆண்டறிக்கை வாசித்தனா்.

விழாவில், வேல்ஸ் பல்கலைக்கழக இணை வேந்தா் எம்.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினாா். இதில் மொத்தம் 1,025 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

பெரியாா் பல்கலைக்கழக தோ்வுகளில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் வென்ற 3 மாணவிகளுக்கும், தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற 19 மாணவிகளுக்கும் பத்மவாணி மகளிா் கல்வி அறக்கட்டளை சாா்பில் காசோலை வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.