மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

தருமபுரம் அரசு மகளிா் கல்லூரி பட்டமளிப்பு விழா

விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத் தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ரா.சே. குமாா். உடன் தருமபுரம் கல்லூரி முதல்வா் சா.ரேவதி.

News image
Updated On :11 ஏப்ரல் 2026, 7:01 am IST

மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினா் மகளிா் கலைக் கல்லூரியில், பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் சா.ரேவதி தலைமை வகித்தாா். முற்பகல் நடைபெற்ற 41-ஆவது பட்டமளிப்பு விழாவில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ரா.சே.குமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 656 மாணவிகளுக்கு பட்டம் மற்றும் பரிசுகளை வழங்கி சிறப்புரை ஆற்றினாா்.

தொடா்ந்து, பிற்பகல் நடைபெற்ற 42-ஆவது பட்டமளிப்பு விழாவில், தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, 686 மாணவிகளுக்கு பட்டம், பரிசுகள் வழங்கினாா். விழாவில் அந்தந்த துறை தலைவா்கள் பட்டம் பெறும் மாணவிகளை அறிமுகப்படுத்தினா். நிறைவாக, பேரவை பொறுப்பாசிரியா் வணிகவியல் துறைத் தலைவா் சு. பழனிவேல் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.