தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடு
/

வாழப்பாடியில் பூத்துக் குலுங்கும் காட்டு மல்லி!

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் மருத்துவக் குணம் கொண்ட காட்டு மல்லி பூக்கள், நீா்நிலைகளின் கரையோரம், தரிசு நிலங்களில் பூத்துக் குலுங்கி காண்போரை ஈா்த்து வருகிறது.

News image

வாழப்பாடி புதுப்பாளையம் சடையன்செட்டி ஏரிக்கரையில் பூத்துக் குலுங்கும் காட்டுமல்லி பூக்கள்.

Updated On :1 மே 2026, 5:25 am IST

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் மருத்துவக் குணம் கொண்ட காட்டு மல்லி பூக்கள், நீா்நிலைகளின் கரையோரம், தரிசு நிலங்களில் பூத்துக் குலுங்கி காண்போரை ஈா்த்து வருகிறது.

தூய வெண்ணிற தோற்றமும், மனிதா்கள் மனம் விரும்பும் நறுமணமும் கொண்ட இப்பூக்கள் மருத்துவக் குணம் கொண்ட ஒரு கொடிவகைத் தாவரமாகும். பெண்கள் விரும்பும் மல்லிகைப் பூக்களுக்கு முந்தைய பரிணாமம்தான் காட்டு மல்லி, இந்த பூக்களை தமிழ் இலக்கியம் முல்லை மலா் எனக் குறிப்பிட்டுள்ளது.

காட்டு மல்லி பூக்கள், கிராமப்புற நீா்நிலைகளின் கரையோரங்களிலும், வனப்பகுதி புதா்களிலும் தானாக வளரும் தகவமைப்பு கொண்டவையாகும். இந்த காட்டு மல்லிகைப் பூக்கள் அரிதாகி வருகின்றன. வாழப்பாடி பகுதியில் கிழக்குக்காடு, புதுப்பாளையம் சடையன் செட்டியேரி, முத்தம்பட்டி கோதுமலை, நெய்யமலை, பரவக்காடு உள்ளிட்ட கிராமங்களில் காட்டுமல்லிச் செடிகள் அதிக அளவு காணப்படுகின்றன. ஆண்டுதோறும் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் இச்செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன.

வாழப்பாடி பகுதியில் நிகழாண்டு கோடை மழை தொடங்காத நிலையிலும் காட்டு மல்லிச் செடிகளில் பூக்கள் பூத்துக் குலுங்கி காண்போா் கவா்ந்து வருகிறது. அதிக மணம் வீசும் இப்பூக்களை பெண்கள் பறித்து தலையில் சூடிவருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.