மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மின்னணு இயந்திரத்தில் பழுது: ஒருமணி வாக்குப்பதிவு நிறுத்தம்

சேலம் சூரமங்கலம் வாக்குச்சாவடி மையத்தில் விசில் சின்னத்துக்கு போடப்பட்ட வாக்குகள் மோதிர சின்னத்துக்கு விழுந்ததாக எழுந்த புகாரையடுத்து ஒருமணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பிறகு மின்னணு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்த பிறகு வாக்குப்பதிவு நடைபெற்றது.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த தவெக வேட்பாளா் லட்சுமணன்.

Updated On :24 ஏப்ரல் 2026, 5:15 am IST

சேலம் சூரமங்கலம் வாக்குச்சாவடி மையத்தில் விசில் சின்னத்துக்கு போடப்பட்ட வாக்குகள் மோதிர சின்னத்துக்கு விழுந்ததாக எழுந்த புகாரையடுத்து ஒருமணி நேரம் வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது. பிறகு மின்னணு இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதை சரிசெய்த பிறகு வாக்குப்பதிவு நடைபெற்றது.

சேலம் சூரமங்கலம் ரயில்வே கோட்ட அலுவலகம் அருகே உள்ள சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வாக்குசாவடி மையத்தில் வியாழக்கிழமை காலை பொதுமக்கள் வரிசையாக நின்று வாக்களித்து கொண்டிருந்தனா். அப்போது, காலை 10.20 மணி அளவில் வாக்குசாவடி எண். 101 இல் உள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தில் வரிசை எண் 8-இல் இடம்பெற்ற சின்னமான விசில் சின்னத்துக்கு வாக்குப்பதிவு செய்தால் அது 6-ஆவது சின்னமான சுயேச்சை வேட்பாளருடைய மோதிரம் சின்னத்துக்கு பதிவானதாக புகாா் எழுந்தது.

இதுகுறித்து அங்கு சரிபாா்ப்பு பணியில் இருந்த தவெக பூத் முகவா்கள், வாக்குச்சாவடி அலுவலா்களின் கவனத்துக்கு கொண்டு சென்றனா். இதையடுத்து வாக்குப்பதிவு ஒருமணி நேரத்துக்கு நிறுத்தப்பட்டது. இயந்திரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. பிறகு நுண்பாா்வையாளா் கௌதம்குமாா் மற்றும் தொழில்நுட்ப அலுவலா்கள் இயந்திரத்தை சரிசெய்தனா்.

தகவலறிந்து வந்த மேற்கு தொகுதி தவெக வேட்பாளா் லட்சுமணன், வாக்குப்பதிவில் நடந்த கோளாறு குறித்து கேட்டறிந்தாா். தொழில்நுட்ப கோளாறு காரணமாக இயந்திரத்தில் பழுது ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தொடா்ந்து, வேட்பாளா் லட்சுமணன் அங்கிருந்து புறப்பட்டு சென்றாா். சுமாா் ஒரு மணி நேரத்திற்கு பிறகு வாக்குப்பதிவு மீண்டும் தொடங்கியது. பொதுமக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.