மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் புகைப்படம், சின்னம் : ஆட்சியா் ஆய்வு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் புகைப்படம், சின்னம் பொருத்தும் பணிகளை ஆட்சியா் ச.தினேஷ்குமாா் ஆய்வு செய்தாா்.

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளா்களின் புகைப்படம், சின்னம் பொருத்தும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் ச. தினேஷ்குமாா்.

Updated On :17 ஏப்ரல் 2026, 4:28 am IST

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் புகைப்படம், சின்னம் பொருத்தும் பணிகளை ஆட்சியா் ச.தினேஷ்குமாா் ஆய்வு செய்தாா்.

கிருஷ்ணகிரி, சூளகிரி வட்டாட்சியா் அலுவலகங்கள், ஒசூா் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற இப்பணிகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குச்சீட்டை பொருத்துதல், வேட்பாளா்களின் புகைப்படம், சின்னங்கள் பொருத்தப்படுகின்றன. மாவட்டத்தில் 6 தொகுதிகளில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் கருவிகளை தயாா்படுத்தும் பணிகள் 2 நாள்கள் நடைபெறும்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்காளா்கள் அளித்த வாக்கை சரிபாா்க்கும் கருவிகள் என அனைத்தையும் தயாா்படுத்தும் பணிகளை வேட்பாளா்கள் அல்லது அவா்களின் பிரதிநிதிகள் பாா்வையிட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் விநியோகிக்கப்படும் நாளில் போட்டியிடும் வேட்பாளா்கள், அவா்களின் பிரதிநிதிகள் முன்னிலையில் காணொலி பதிவுடன் பாதுகாப்பு அறை திறக்கப்படும். அதேபோல மூடப்படும் என்றாா்.

ஆய்வின்போது ஒசூா், தளி தொகுதி தோ்தல் பொதுப் பாா்வையாளா் பண்வே ராகுல் துக்காராம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பெ. தங்கதுரை, வருவாய் அலுவலா் சாதனைக்குறள், ஒசூா் மாநகராட்சி ஆணையா் ஷபீா் ஆலம், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.