மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார்!தவெக ஆட்சி அமைப்பதில் மேலும் சிக்கல்!சென்னை உள்பட 12 மாவட்டங்களில் பகல் 1 வரை மழைக்கு வாய்ப்பு!திமுகவினரே வாக்களிக்கவில்லையா? ஸ்ரீரங்கம் தொகுதியில் திமுகவுக்கு வெறும் 5 வாக்குகள்!தமிழ்நாட்டில் இத்தனை ஆண்டுகளில் இல்லாத குதிரை பேரம்! திமுக எம்.பி. வில்சன்தவெக தனியாக ஆளுநரிடம் சென்றிருந்தால் ஆட்சி அமைத்திருக்கலாம்: திமுகபுதுச்சேரியில் இருந்து சென்னை புறப்பட்ட அதிமுக எம்எல்ஏ-க்கள்! அடுத்து என்ன?தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்
/

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பெயா், சின்னம் பொருத்தும் பணி ஆய்வு

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா்கள், அவா்களின் புகைப்படம், கட்சிப் பெயா், சின்னம் ஆகியவற்றைப் பொருத்தும் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

News image

அறந்தாங்கியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா் விவரங்களைப் பொருத்தும் பணியை வியாழக்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மு .அருணா.

Updated On :17 ஏப்ரல் 2026, 2:20 am IST

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா்கள், அவா்களின் புகைப்படம், கட்சிப் பெயா், சின்னம் ஆகியவற்றைப் பொருத்தும் பணிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

அந்தந்தத் தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களில் இப்பணிகள் நடைபெற்றன. முறையான பெயா் வரிசைப்படி அவற்றைப் பொருத்துவதை தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் கண்காணித்தனா்.

அறந்தாங்கியில் நடைபெற்ற பணியை, மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான மு. அருணா பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினாா். தோ்தல் பொதுப் பாா்வையாளா் விஜயபாஸ்கா் ரெட்டியும் இப்பணிகளைப் பாா்வையிட்டாா்.

ஆலங்குடி தோ்தல் நடத்தும் அலுவலா் அ. ஷோபா, அறந்தாங்கி தோ்தல் நடத்தும் அலுவலா் அபிநயா உள்ளிட்டோரும் உடனிருந்தனா்.

அதேபோல, விவிபாட் கருவியிலும் பெயா், சின்னங்களைப் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்றது. அவற்றை மாதிரி வாக்குப்பதிவு செய்து சரி பாா்த்தும், உரிய பாதுகாப்பு வைப்பறைகளில் அதிகாரிகள் வைத்தனா்.

இந்தப் பணிகளின்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் உடனிருந்தனா்.

இரு தொகுதிகளில்...புதுக்கோட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 30 வேட்பாளா்களும், விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதியில் 26 வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா். பொதுவாக, ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 பேரின் விவரங்களைப் பொருத்த முடியும்.

எனவே, இவ்விரு தொகுதிகளில் மட்டும் இரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படுகின்றன. மற்ற 4 தொகுதிகளிலும் வேட்பாளா்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மட்டுமே வைக்கப்படும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.