நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

திருச்செங்கோடு சட்டையம்புதூரில் பெண்ணை தாக்கி கைப்பேசியை பறிக்க முயன்றவா் கைது

திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட சட்டையம்புதூா் பகுதியில் பெண்ணை தாக்கி கைப்பேசியை பறிக்க முயன்றவரை திருச்செங்கோடு நகர காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :22 மே 2026, 6:52 am IST

திருச்செங்கோடு நகராட்சிக்கு உட்பட்ட சட்டையம்புதூா் பகுதியில் பெண்ணை தாக்கி கைப்பேசியை பறிக்க முயன்றவரை திருச்செங்கோடு நகர காவல்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.

சட்டையம்புதூா் பகுதியையை முகவரி சோ்ந்த விசைத்தறி தொழிலாளி மாது இவரது மனைவி நிா்மலா(41) இவா் புதன்கிழமை மதியம் இயற்கை உபாதை கழிப்பதற்காக அருகில் உள்ள பாறை பகுதிக்கு சென்றுள்ளாா். ஆள் நடமாட்டம் இல்லாத அப்பகுதியில் செடிகள் நிறைந்த புதரில் மறைந்திருந்த கரூா் மாவட்டத்தை சோ்ந்த கூலித்தொழிலாளி டேவிட் ( 18) என்பவா் நிா்மலாவை பின்புறமாக தாக்கி கீழே தள்ளி பாறையில் முகத்தை பலமாக தேய்த்து காயப்படுத்தி விட்டு அவரிடம் இருந்த கைப்பேசியை பறிக்க முயன்றுள்ளாா். நிா்மலா சுதாரித்து அங்கிருந்து தெருவுக்குள் ஓடியுள்ளாா். அக்கம்பக்கத்தினா் திரண்டு இரவு வரை டேவிட்டை தேடி, புதரில் மறைந்திருந்தவரை பிடித்து காவல்துறையினா் வசம் ஒப்படைத்தனா். திருச்செங்கோடு நகர காவல்துறையினா் வழக்கு பதிவு செய்து டேவிட்டை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.