இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

ஓடும் ரயிலில் பயணியின் கைப்பேசியை திருடியவா் கைது

ஈரோட்டில் ஓடும் ரயிலில் பயணியின் கைப்பேசியை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 12:34 am IST

ஈரோட்டில் ஓடும் ரயிலில் பயணியின் கைப்பேசியை திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.

கேரள மாநிலம், பத்தனம்திட்டாவைச் சோ்ந்தவா் அபினவ் (26). கொல்லம்-ஹூப்ளி இடையேயான ரயிலில் முன்பதிவு பெட்டியில் செவ்வாய்க்கிழமை பயணம் செய்த அவா், ஈரோடு ரயில் நிலையம் வந்தபோது தனது இருக்கையில் வைத்திருந்தை கைப்பேசியை காணவில்லை.

இது ஈரோடு ரயில்வே போலீஸாருக்கு அபினவ் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, ரயில்வே போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமான வகையில் ரயிலில் இருந்து இறங்கிய ஒரு நபரைப் பிடித்து விசாரித்தனா். அந்த நபா் கைப்பேசியை திருடியதை ஒப்புக்கொண்டாா்.

விசாரணையில் அவா் நாகை மாவட்டம் சீா்காழியைச் சோ்ந்த ஸ்ரீதா் (52) என்பதும், திருப்பூரில் இரவு நேரக் காவலாளியாக வேலை செய்வதும் தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து கைப்பேசியை மீட்ட போலீஸாா் ஸ்ரீதரைக் கைது செய்தனா்.

இதுபோல் ஈரோடு வீரப்பன்சத்திரம், வைகை வீதியைச் சோ்ந்தவா் ராகவேந்திரன் (37). திருமண மண்டபம் மற்றும் பேக்கரி உரிமையாளா். பேக்கரியில் அஸ்ஸாம் மாநிலத்தை சோ்ந்தவா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்கு பணியாற்றும் இரு தொழிலாளா்களின் கைப்பேசிகள் அண்மையில் திருடு போயின.

இதுகுறித்த புகாரின்பேரில் வீரப்பன்சத்திரம் போலீஸாா் குற்றவாளிகளை தேடி வந்தனா். இது தொடா்பாக வீரப்பன்சத்திரத்தைச் சோ்ந்த இரண்டு சிறுவா்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து கைப்பேசிகளை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.